டியர் ஜெ
திரு.அரவிந்தன் அவர்களின் கட்டுரை மிகத் தெளிவானது அவருக்கே உரிய கறார்தன்மையுடன்.திரு.ராய் மாக்ஸ்ஹாம் எனக்கு முக்கியமானவர். எனக்குப் புரிந்த வரையில் மிஷெல் தானினோ வையும் ராய் மாக்ஸ்ஹாமையும் ஒரே கோட்டில் இணைத்தது தவிர அவரின் பார்வை மற்றும் வெளிப்படுத்திய விதத்தில் சீரான முறையில் வந்த கட்டுரையே.
இருப்பினும், உதாரணமாக இன்று என் கண் படும் தமிழ்நாட்டு திராவிட அரசியல் நிகழ்வுகளை பிற்காலத்தில் கிசுகிசுவின் துணையின்றி யாரேனும் புரிந்துகொள்ள முடியுமா என்பதில் எனக்கு குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.
கிசுகிசுக்கும் வரலாற்று ஆய்வுக்கும் அப்பால் எங்கோ உண்மை உறங்குகிறது. அனைத்தையும் தொட்டு விரிவது உங்கள் பார்வை என்று கொள்கிறேன்.
அவரவர்க்கு அவரவர் கண்ணாடிகள்.
இருவருக்கும் நன்றி.
Regards,
RC

அன்புள்ள ஜெ,
உங்களின் பல கட்டுரைகளை இதற்க்கு முன் படித்திருந்ததால்
http://contrarianworld.blogspot.in/2017/05/blog-post.html?m=1
படித்த போதே உங்கள் கருத்து என்ன என்று ஊகித்து விட முடிந்தது.
நீங்கள் war அண்ட பீஸ் குறித்து முன்னர் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது.
மேலும் விஷ்ணுபுரம் மற்றும் வெண்முரசு இவற்றில் சூதர் பாடலின் முக்கியத்துவம் (மற்றும் பாகவத்திலும் சூதரே தொடங்குவது எனக்கு பிடித்த ஒரு விஷயம்) வருகிறது.
அரவிந்தனின் கட்டுரை படிக்கையில் இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.
சூதர் பாடல் என்பது கிசு கிசு போல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதைகள் படிமங்கள் நாட்டுப்புற பாடல்கள் என்று ஒரு குழுவின் கலாச்சாரம் எப்படி விரிந்து பரவுகிறது என்பதை வெண்முரசின் முக்கிய கதை சொல்லும் பாங்காக அறிந்தேன். அதையே இங்கு வேறு விதத்தில் சொல்வதாக உணர்கிறேன்.
பிழையான புரிதல் இருப்பின் மன்னிக்கவும்
இன்று உங்களின் பதில் படித்தது அருமையாக இருந்தது
http://www.jeyamohan.in/98430#.WRqNNtLysvg
Thanks
Sridhar
***
கிசுகிசு வரலாறு படித்தேன்… எனக் கொரு சந்தேகம்,, ‘நெஞ்சுக்கு நீதி‘ .யை எதில் சேர்ப்பது?
நன்றி,
சிவகுமார் கே,
****
அன்புள்ள சிவக்குமார்
அது நெஞ்சுக்குக் கிசுகிசு
ஜெ