இதுவரையில் மனிதவாழ்வின் பொதுவற்றவை அசாதாரணங்கள் என்பனவே கதையாகியது. ஆனால் முத்துலிங்கம் மொத்தத்தில் ஒரு சாதாரணமான யாழ்பாணத்தவனது வாழ்வை மிகவும் சுவையாகச் சொல்லியிருக்கிறார். அவரது பாணியில் சொல்வதானால் கொக்குவிலில் சுருட்டை சுத்தி விட்டு அதன் பின்பக்கத்தைக் கத்திரியால் அளவாக நறுக்குவதுபோல் கதைகளைத் தொய்வற்று நறுக்கி பெட்டிக்குள் வைத்திருக்கிறார் .