’குமரன்’, தமிழகத்தின் காரைக்குடியில் இருந்து வெளிவந்த இதழ் (இலங்கையிலிருந்தும் ‘குமரன்’ என்ற பெயரில் ஓர் இதழ் வெளிவந்தது). சீர்திருத்தச் செம்மல் என்று அழைக்கப்பட்ட சொ. முருகப்பா, 1922-ல், இவ்விதழைத் தொடங்கினார். சமயம் மற்றும் தமிழ் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான இவ்விதழில், தமிழறிஞர்கள் பலர் பங்களித்துள்ளனர். குமரன் ஒரே சமயத்தில் மாதப் பதிப்பு, வாரப் பதிப்பு என இரு விதங்களில் வெளிவந்தது.
தமிழ் விக்கி குமரன்