ஃபிரிமான்டில் சிறை, கொலை செய்யப்பட்ட பெண், பேயாக அலையும் சிறை என்ற ஒரு விடயம் என்னைக் கவர்ந்தது. என்னளவில் அதுவே இந்த சிறையின் முக்கியத்துவம். வீடுகளில், சுடுகாடுகளில் ஏன் தெருவில் ஆவியாக அலைவது எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதிலும் ஆவிகளில் பெண்கள் அதிகமென்பர்கள். காலங்காலமாக அநியாயமாகக் கொலை செய்யப்படுபவர்கள் அவர்களே!