அஜிதனின் மைத்ரி விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் புதியநூல்களில் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது (2023ல் நான் பன்னிரு காதல்கதைகள் என்னும் தொகுப்பை வெளியிட்டு அதை முறியடிக்கவிருக்கிறேன்) அந்நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியீடும், விமர்சனக்கூட்டமும் சென்னையில் வரும் ஜனவரி 7 ஆம்தேதி நடைபெறவிருக்கிறது.
இடம் கவிக்கோ அரங்கம். மாலை 530 மணி.
இயக்குநர் மணி ரத்னம்
மலையாளக் கவிஞர் பி.ராமன்
எழுத்தாளர் சாம்ராஜ்
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்
எழுத்தாளர் பார்கவி
ஆகியோர் நிகழ்வில் பேசுகிறார்கள்.
மைத்ரி நாவல் இணையப்பக்கம்
மைத்ரி – அ.முத்துலிங்கம்
மைத்ரியும் மோட்டார்சைக்கிளும்- கடிதம்
மைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்