கோவை சொல்முகம் அரங்கும் எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்கும்

கோவை வடவள்ளியில் அமைந்துள்ள விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகத்தின் மாடியில் ஒரு குடில் அமைக்கப்பட்டுள்ளது. இலக்கியச் சந்திப்புகளுக்கான இடம். ‘சொல்முகம் வாசகர் குழுமம்’ செயல்படும் இடம் இது. 30 பேர் வரை அமர முடியும். 24 டிசம்பர் 2022 அன்று எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அலுவலகம் வந்திருந்தார். அரங்கை அவரும் எம்.கோபாலகிருஷ்ணனும் திறந்து வைத்தனர்.

எம்.கோபாலகிருஷ்ணன் அரங்கை திறந்து வைத்து விளக்கேற்றுகிறார்

நாஞ்சில் நாடா வெட்டி திறந்து வைக்கிறார். திறப்பதற்கு முன்னரே உள்ளே பூந்திருப்பது ஜெ.சைதன்யா.

கோவை சொல்முகம் வாசகர்குழுமம் சார்பில் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள் பற்றி நிகழ்ந்த வாசகர் அரங்கம். எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள் வாசகர்கள் பேசினர். எம். கோபாலகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார்.

முந்தைய கட்டுரைமயிலை சீனி வேங்கடசாமி
அடுத்த கட்டுரைஅறிவின் விளைவா உறுதிப்பாடு?