போகனின் திகிரி

திகிரி வாங்க

போகனின் சிறுகதை தொகுப்பான திகிரி,  பெண்ணின் உணர்வுகளையும் ஆணுடனான உறவுகளும் அதில் அவள் கொள்ளும் இன்னல்கள்  என பெண்களின் வெவ்வேறு சுழல்களையம், துயரங்களையும் சித்தரிக்கிறது. இந்த எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருவைகொண்டுள்ளது என்றேதோன்றுகிறது. இந்த எண்ணத்தாலேயே   பொதுவான பலதரப்பட்டகருக்களை கையாளும் தொகுப்புகளை விட இதுவேறுபடுகிறது. ஒரே கரு வெவ்வேறு சூழலில் படைப்பாளியால் எப்படி கையாளப்படுகிறது என்பது ஒரு நல்ல அனுபவம். எழுத்தாளர் ஒருகவிஞரும்என்பது இன்னும் சிறப்பு உவமைகள், படிமங்கள்மொழி அழகுடன் கதைகளை இன்னும்அனுக்கமாக்குகிறது.

இத்தொகுப்புக்கான  விமர்சனங்கள் சில இது வெறும் பெண்ணின் துயரமும்அதற்கு மூலகாரணம் ஆண் என்று மட்டுமேபேசுகின்றன. ஆனால் திகிரி தொகுப்பை அப்படிசுருக்கி விட முடியாது.

பெண்ணின் துயர்ப் பின்னணியாக இருந்தாலும் இந்தகதைகள் அதன் வேர்களை ஆராய்கிறது. ஆணுக்குபெண்ணின் உடல் என்பது எப்படி பொருள்படுகிறது, சில கதைகளை கவனித்தால்   ஆணின்உளச்சிக்கல்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது  அதாவது அவன் பெண்உடல்மீது கொண்ட இச்சையும் உடைமையும் அதே சமயம்அந்த செயல்களால் அடையும் வெறுப்பும் என அவனை அழைக்கழிக்கிறது.  அதுவே அவனின் கூரூரத்திற்குகாரணமோ என எண்ணத் தோன்றுகிறது”திகிரி”என்னும் கதையில் இது ஆழமாகவிவரிக்கப்பட்டுள்ளது இந்த கதை ஒரு மிஸ்டிகல்அனுபவம் தரக்கூடியது. கதைசொல்லி ஏன்சமணகுன்றுக்கு சென்றான், இந்த படுகளத்தில் ஓயாதுநடக்கும் இந்த துயரங்கள் ஒரு சுழற்சி என்று கண்டுகொள்கிறான். இந்த கதைக்குள் சொல்லப்படும்ஒரு தொல்  கதையின் பெண் கதாபாத்திரம் கடந்தகால சம்பவங்களை நிகழ்கால சம்பவங்களுடன்இணைக்கிறது, அதாவது வெவ்வேறு காலங்களில்வெவ்வேறு காரணங்களால் நடைபெறும் ஒரேவகையான துயரம் . கதைசொல்லி ஒருஉண்மையையும் இங்கே ஒளி வடிவான திகம்பர பிம்பம்மூலம் கண்டடைகிறான் ” அறியாமையை வழிபடுகிறவர்இருளில் ஆழ்கிறார் அறிவை வழிபடுகிறவர் இன்னும்  ஆழ் இருளில் ஆழ்கிறார்” இந்த வாக்கியத்தை  சிந்தித்தால் ஒரு நடுக்கம் வராமலில்லை, எப்போதும்மாறாமல் தொடரும் நிகழ்வுகள் கடவுளின் பகடைக்  காய்கள்.

முதல் கதையான  “தீட்டு” கோமதியின் உணர்வுகளைஇயல்பாக கடத்தி விடுகிறது. எல்லா பக்கமும் அவள்மறுக்கப் படும்போது இந்த உலகமே கல்ஆகிவிட்டதா என்றெண்ணும் அவள் அக உலகத்தில் நாமும்நுழைந்து விடுவோம். அவளின் உடல் சார்ந்தஅடையாளங்களால் இழிவு செய்யப்படுகிறாள், பால்யகாலத்தில் அவளுடைய  அடிமுட்டாளானநண்பனும் அவளை பெண் பார்க்க வந்து நிராகரிக்கிறான். அவளின் கடை முதலாளி அவளை இழிவு செய்யும் அதே சமயம் அவள் மேல் இச்சையும்கொள்கிறார். வேறு வழியில்லாமல் தன் வாழ்வின் ஒரேநம்பிக்கையான ஆச்சியைக் காப்பாற்ற அவனிடம்முன்பணம் கேட்கிறாள். அவன்   அவளை இருட்டின்ஒரு மூலையில் அணைத்து  இச்சையை தீர்க்கையில்”தீட்டாயிருச்சுன்னே” என்கிறாள்உடம்பெல்லாம்”தரித்திரம்” என்று அவர் கைஉதறிசென்றுவிடுகிறார். அங்கே தொங்கும் படத்தில்சிவனின் கழுத்திலுள்ள பாம்பு அதன் கண்கள் மினுங்கஅசைவது போன்ற காட்சி  முதலாளியின் இச்சைமற்றும்  சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் படிமமாக  உள்ளது.

முதல் கதையிலிருந்து அடுத்தடுத்த கதைகள் இந்தஉறவு சிக்கலையும் அதில் ஒரு சமநிலையைக்காணவும் செய்கிறது “ஜெயமோகனின் கள்ளகாதலி”. தலைப்பு விஷேஷத்திற்காகவே இது அதிகம்வாசிக்கபட்டிருக்க வாய்ப்புள்ள கதை  ,பெயருக்கேற்றாற்போல் மெல்லிய பகடிகளும் உள்ளதுஅது போகன் ஸ்பெஷல். இந்த கதை போதகர் ஜெயச்சந்திரனின்  பெண்மை காமம்  குறித்தானவெறுப்பின் மீது ஒரு மாற்று உண்மையைகாணச்செய்கிறது. கதைசொல்லி “லேடி சாட்டர்லிகாதலன்” என்னும் கதையின் மூலமாக பெண்ணைமுழுதாக விரும்புவதை  பெண்ணின் உடலை முழுதாகஏற்ற பின்னே அடுத்த நிலை தூய அன்பு சாத்தியம் எனவேறொரு கதை மூலமும் சொல்கிறான்.

தொகுப்பின் கடைசி கதையான “சிறுத்தை நடை” மலை பிரதேசத்தில் நடக்கிறது கார்மல் என்னும்வக்கிரகுணம் கொண்ட கணவன். அவன் மனைவிஸ்கார்லெட் அவனின் கொச்சை வார்த்தைகளால்புண்படுகிறாள்  ” நீ யாரோடாவது படுக்கவேணும்என்று தோன்றினால் என் மேல்அதிகாரியிடம் படு, அதுநமக்கு உபயோகப்படும்” என்னும் வரிகளிலேயே அவன்வெளிப்பட்டாலும் இவனை புரிந்து கொள்வது சற்றுகுழப்பம் தான்.இந்தக் கதையில் இரண்டு விதமானஅடக்குமுறை உள்ளது, ஒன்று சாக்கோ என்னும்சங்கரலிங்கம் மீது செலுத்தப்படும் வன்முறை அவன்கூறும்கதைகள் மூலம் அவன் பின்னணியைஊகிக்கலாம். மற்றொன்று அடக்குமுறை என்பதை  விட ஒரு பெண்ணின் சூழலைபயன்படுத்திக்கொள்ளும் ஆணின் இச்சை.ஸ்கார்லெட்டிடம் எல்லோரும் இது சமவெளி அல்லஇது காடு இதன் தெரியாத பக்கங்கள் மோசமானதுஎன சொல்கிறார்கள். அவள் நட்டு வைக்கும் நாட்டுரோஜா அங்கே பூஞ்சை பிடித்து வாடிவிடுகிறது,கதையின் இறுதியில் ஸ்கார்லெட் ஸ்தம்பிகும் விதமாகவேலைக்காரன் முனுசாமியின் சிறுத்தை முகம் வெளிப்படுகிறது.

இப்படி எல்லாக் கதைகளிலும் பெண்ணின்உணர்வுகளை நுட்பமாக புண்படுத்தும் காட்சிகள்உள்ளன. அதே சமயம் இத்தொகுப்பில் வழக்கங்களைஉதறி பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ளும்சாத்தியமுள்ள கதைகளும் உள்ளது. “க்ளிஷே” என்னும் கதையில் தாய்க்கும் மகனுக்கும் நடக்கும்உரையாடல் வெளிப்படையாக ஒரு தாயின் அல்லதுகணவனைப் பிரிந்த பெண்ணின்  அக உணர்வுகளை வெளிப்படுத்துகிறது . மகனும்  “என் மழைக்காலஇரவுகள் எப்படிப்பட்டவை என உனக்கு புriயவேபோறதில்லை” என சொல்லும் தாயின் உணர்வுகளை    புரிந்துகொள்ளும்  ஒரு “நவீன”இளைஞன். முகம், ஆடை  கதைகள் ஆணின் ரொமான்டிக் பாவனைகளும் உண்மையான  இக்கட்டு சூழலில்அவனின் தப்பித்து செல்லும் மனோபாவத்தையும்சொல்கிறது. “கூண்டில் அடைக்கப்பட்ட சிட்டுக்குருவிபிரபஞ்சத்தில் ஒரு  பதற்றத்தை ஏற்படுத்துகிறது” என்னும் தமிழ் செல்வியின் கவிதை வரி  குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுப்பின் கதைகள் பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கும்ஒருதேடல், அதன்வழி ஆணின் மனதையும். எத்தனை எழுதினாலும் இது நீளும்என்றே தோன்றுகிறது. கடவுளின் வக்கிரங்கள் ஆணுக்கும் கடவுளின் துயரங்கள் பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது,இதில் சமநிலை காண்பதே  அல்லது காணமுயற்சிப்பதே வாழ்க்கை என்னும் உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு.

விஷ்ணுகுமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் – மமங் தய்
அடுத்த கட்டுரைபிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்