விஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர் வரிசையை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் எவரெல்லாம் அழைக்கப்படப்போகிறார்கள் என்னும் எதிர்பார்ப்பு உருவாகிவிடுகிறது. பல புதிய எழுத்தாளர்களை என்போன்ற வாசகர்கள் அப்போதுதான் அறிமுகம் செய்துகொள்கிறோம்.

இதிலே பல சிக்கல்கள் இஙே உள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு அங்கே ஒரு வட்டம் உண்டு. ஆனால் அந்த எழுத்துக்கள் வழியாக நம்மால் அவர்களை சரியாக மதிப்பிட முடியாது. அவ்வப்போது இணையப்பத்திரிகைகளிலும் அச்சுப்பத்திரிகைகளிலும் ஏதாவது கதைகள் வரும். அதைக்கொண்டும் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஒரு தலைமுறையில் யாரை கவனிக்கவேண்டும் என்பதை விமர்சகர்கள் சொன்னால்தான் உண்டு. அப்படி ஒரு தொடர்ச்சியான விமர்சனச் செயல்பாடு இப்போது இங்கே இல்லை. எழுத்தாளர்களின் சிபாரிசுகள்தான் முக்கியமானவை.

இந்த விழாக்களில் ஒருவரை அழைப்பதே ஒரு சிபாரிசுதான். வாசிக்கும்படிச் சொல்லும் ஆணைதான். அதன்பின் அந்தச்சந்திப்பில் அவர்களைப் பற்றிப் பேசப்படும்போதும் அவர்கள் கேள்விகளுக்குப் பதில்சொல்லும்போதும் அவர்களின் அடையாளமென்ன என்று தெரிந்துவிடுகிறது. அதன்பின் அவர்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம். ஆச்சரியமாக உள்ளது. இன்றைக்கு தமிழில் இதைப்போன்ற ஒரு அவை வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்த்துக்கள். நிகழ்ச்சியை எதிர்நோக்குகிறேன்.

ராமசாமி அருண்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

 

விஷ்ணுபுரம் விருந்தினர் 7, குளச்சல் மு.யூசுப்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

முந்தைய கட்டுரைதங்கப்புத்தகம், கடிதம்
அடுத்த கட்டுரைஎழுதுவது, கடிதம்