நீர்ச்சுடர் செம்பதிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்க பயணம் முடிந்து வந்தபிறகே அவரிடம் கையொப்பம் பெற வேண்டியிருந்ததால் நீர்ச்சுடர் முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் புத்தகம் அனுப்ப இயலவில்லை. அனைவருக்கும் இம்மாதம் 25ம் தேதி முதல் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

களிற்றியானை நிரை, கல்பொருசிறுநுரை, முதலாவிண் ஆகிய புத்தகங்களும் (செம்பதிப்பு) ஜூலை இறுதிக்குள் தயாராகிவிடும்.

வெண்முரசின் முதல் ஆறு பகுதிகளான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம் நூல்களின் சாதாரண பதிப்பும் தயாரிப்பில் உள்ளது. அவையும் ஜுலை மாத இறுதிக்குள் வெளிவரும்.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைஇர்வைன் சந்திப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைகே.ராமானுஜம்