ச. பாலசுந்தரம், இக்காலகட்டத்தின் பவணந்தி

அறிவியக்கத்தின் முதன்மைச் சிக்கல்களில் ஒன்று நாம் எந்த வட்டத்தில் புழங்குகிறோமோ அந்த வட்டத்தை மட்டுமே அறிந்திருப்பது. அதை தவிர்க்கவும் கூடாது, ஏனென்றால் அதன் வழியாகவே நாம் நம் அறிவுப்பங்களிப்புக்கான களத்தை ஆழமாக அறிகிறோம். அதன் உள்நெறிகளை கற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் ஆழ அறிவதென்பது இயல்வதல்ல.ஆனால், நம் வட்டத்திற்க்கு அப்பாலுள்ள அடிப்படைகளை நாம் அறிந்திருக்கவேண்டும். நம் எல்லைக்குட்பட்டு.

நவீன இலக்கியச் சூழலில் புழங்கும் என்னைப் போன்றவர்களுக்கு மரபிலக்கியம், இலக்கணம் சார்ந்து செயல்படும் அறிஞர்கள் மிகமிக தொலைவில் இருப்பவர்கள். நான் முயன்று ஓரளவு அவர்களை அறிந்து வைத்திருப்பவன். பெரும்பாலான நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அவர்கள் எவரென்றே தெரிந்திருக்காது. அத்தகைய சூழலில்தான் நல்ல கலைக்களஞ்சியங்கள் பங்களிப்பாற்றுகின்றன. அவை ஒன்று தொட்டு ஒன்றென இணைப்புகள் வழியாக வட்டத்துக்கு வெளியே நம்மை அழைத்துச் செல்கின்றன

ச.பாலசுந்தரம் தமிழ் இலக்கியவாதிகள் அறிந்திருக்கவேண்டிய ஒருவர். இலக்கண அறிஞர். அவருடைய தென்னூல் மரபுசார் கூறுமுறை கொண்ட இலக்கண நூல்- ஆனால் சிறுகதை, புதுக்கவிதை அனைத்துக்கும் இலக்கணம் உரைப்பது

ச.பாலசுந்தரம்
ச.பாலசுந்தரம் – தமிழ் விக்கி

ச.பாலசுந்தரம்

முந்தைய கட்டுரைமீட்பின் நம்பிக்கை
அடுத்த கட்டுரைகலைச்சொற்களும் அனுபவமும்