திருப்பூர் கௌசிகா நதி (திரு வெண் ஆற்றங்கரை ) பசுமை நடை 24-04-2022 அன்று கௌசிகா நதி கரையோரத்தில் நடந்தது . குறிப்பாக பறவை பார்த்தல் மற்றும் திரு. பாரதிதாசன் அவர்களின் “காட்டின் குரல்” மற்றும் “பாறு கழுகுகளைத் தேடி” ஆகிய நூல்கள் அறிமுகத்துடன் இயற்கை நடை நடைபெற்றது. இந்த உரைக்கு இந்த புத்தகங்களின் ஆசிரியர் திரு. பாரதிதாசன் அவர்களும் வந்தது மேலும் சிறப்பு.
பாறு கழுகுகள் பற்றி பாரதிதாசன் youtube link –
https://www.youtube.com/watch?v=Up75zjrLaXE
இந்த நிகழ்வில் புத்தக அறிமுகத்திற்கே அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பறவை பார்த்தல் இந்த முறை அதிகம் இல்லாமல்போனது.
உரையின்போது உட்க்கார்ந்து கொன்டே கரிச்சான் , ஈ பிடிப்பான், புள்ளி மூக்கு வாத்து, கொண்டைவால் குருவி, மீன் கொத்தி, நாரை, கொக்கு, ஆட்காட்டி , மைனா போன்ற பறவைகளை எளிதாக பார்த்தோம்.
மாதம் இருமுறை நிகழும் இந்த பசுமை நடைக்கு முன்பதிவு செய்ய
கிருஷ்ணராஜ் – 98949 07750
முருகவேள் – 90033 83214
https://www.facebook.com/KnowAboutOurEnvironment/
பன்னீர்செல்வம் ஈஸ்வரன்