கழுவாய்- சுதா ஸ்ரீநிவாசன்

சுதா ஸ்ரீநிவாசனும் அவர் கணவர் ஸ்ரீநிவாசனும் வெண்முரசின் பிழைநோக்குநர் மற்றும்  பிரதிமேம்படுத்துநர்களாக ஏழு ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள். வெண்முரசு முடிந்தது அவர்களுக்கு ஒருவகையான நிறைவையும் வெறுமையையும் அளித்திருக்கலாம். ஸ்ரீநிவாசனுடைய தாத்தாவின் ஊரான திருக்குறுங்குடிக்கு அவர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே ஓராண்டாக வாழ்கிறார்கள்.

சுதா ஸ்ரீநிவாசன் தன் முதல் கதையை வனம் இதழில் எழுதியிருக்கிறார். நெடுங்காலமான தீவிரமான வாசிப்பு அளிக்கும் இயல்பான மொழியும் வடிவ ஒருமையும் அமைந்த படைப்பாக அது அமைந்திருக்கிறது. இக்கதையில் உருவாகிவருவது லா.ச.ரா உருவாக்கிய ஓர் உலகின் நீட்சி. பெண்களின் குடும்பச்சூழலுக்குள் ஊடாடும் மானுடக்குரூரங்கள், அற்பத்தனங்கள், துயரங்கள், அதை வென்றெழும் புரிந்துகொள்ளமுடியாத அகவிசைகள், அவை வெளிப்படுவதிலுள்ள மாயத்தன்மை.

கழுவாய்- சுதா ஸ்ரீநிவாசன்


முந்தைய கட்டுரைவெண்முரசு இசைக்கோலம்
அடுத்த கட்டுரைவெண்முரசு இசை வெளியீடு நிகழ்வு