நட்சத்திரங்கள் தெரியும் தருணம்

எழுதுபவர்கள் அனுபவங்களை அப்படியே பதிவுசெய்ய முதலில் முயல்கிறார்கள். அப்படியே பதிவுசெய்ய முடியாமல் அதை உருக்கி உருமாற்றுபவர்களே புனைவுக்குள் செல்கிறார்கள்.

அருண்மொழி அவள் இளமையை எழுதமுற்பட்டபோது அந்தர்வாகினியாக தஞ்சையில் ஓடும் காவிரியை கர்நாடக சங்கீதமாக உருவகிக்கும் இடத்தில் புனைவுக்குள் சென்றாள். அதை அப்போதே சுட்டிக்காட்டினேன். அவளுடைய எல்லா கட்டுரைகளிலும் அந்த புனைவம்சம் எப்போதுமிருந்தது. ரஷ்ய இலக்கிய வாசிப்பை இமையமலைகளின் உருகாத பனியுடன் ஒப்பிட்டிருப்பதிலும் நவீனக்கவிதையின் அழகியல் இருந்தது.

அந்த அழகியல் இன்னும் நுட்பமாக வெளிப்பட்ட கதை – கட்டுரை இது. ஓர் உணர்வுக்கொந்தளிப்பின் நிலை [catharsis ] அதன் உச்சத்திற்கு அப்பால் உன்னத தரிசனமாக [sublime] ஆவதை இயல்பாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. அந்த தன்மய பாவமும் கண்ணீரும் இல்லையென்றால் அந்த விண்மீன்கள் கண்களுக்குப் பட்டிருக்காது

வானத்தில் நட்சத்திரங்கள்

முந்தைய கட்டுரைநேரா நிர்வாகம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: எஸ்.ரமேசன் நாயர்