கரையே இல்லாத ஆறு குறித்தும், இல்லாத கரையில் ரகசியத்தின் திறப்பை தேடுவது குறித்தும் எண்ணிக்கொண்டேன். எப்படிப்பட்ட கவித்துவம். அப்படி இன்மையில் கிடைக்காத ஒன்றுக்காகப் பைத்தியமாகத் திரிவதன் வலியை உணர முடியுமென்றால் இந்த நாவலையும் நெருங்கி அறிந்துகொள்ளலாம்.