வெண்முரசின் பாத்திரங்களுக்கு மிக வலுவான உளவியல் பின்னணி இருப்பதை நாம் அனைவருமே கவனித்திருப்போம். சில சம்பவங்கள் இத்தகைய பின்னணி எதுவுமில்லாமலேயே அரங்கேறி விடுவதும், அதன் பிறகு அதற்குக் காரணங்களை கண்டடைவதும் வெண்முரசின் வாசிப்பில் நிறைவே நிகழ்ந்துள்ளன. வெண்முரசில் பெருந்தோழி மாயையின் பாத்திர வடிவமைப்பு அத்தகைய ஒன்று. பொதுவாக நாம் அறிந்த நிகழ்வுகளுக்கு மாறாக குருதியள்ளி கூந்தல் முடிப்பேன் என சூளுரைப்பது மாயை. பன்னிரு படைக்களத்தில் அவ்வாறு சூளுரைத்த மாயை மீண்டும் வருவது குருதிச்சாரலில் தான். இத்தனை நாள் அவள் அந்த வஞ்சத்தை விடாமல் பற்றி இருக்கிறாள். ஏன்? முதன்மை வினாவாக அவள் ஏன் இத்தகையதோர் வஞ்சினம் உரைத்தாள்?
வெண்முரசு தொடர்பானவை செந்நாவேங்கை – பெருந்தோழி