தனிமையின் புனைவுக் களியாட்டு

நண்பர்களுக்கு,

பெரும்பாலானவர்கள் சொந்தவீட்டில் சிறையில் இருக்கும் நேரம் இது. இச்சூழலில் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் போலச் சோர்வுறச் செய்பவை வேறில்லை. ஆகவே புனைவில் திளைக்கலாமென்று ஓர் எண்ணம்.

நண்பர்கள் எழுதும் புனைகதைகளை ஒவ்வொருநாளும் வெளியிட நினைக்கிறேன்.நானும் முடிந்தால் எழுதலாம் என்றும் திட்டம்.

ஆனால் இந்தப் புனைகதைகளுக்குச் சில நிபந்தனைகள் உண்டு, அவை சிடுக்கானமொழியுடன் புதிரான வாசிப்பை அளிப்பதாக இருக்கலாகாது.யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்ற பேரில் செயற்கையான கொடூரங்களைச் சொல்வனவாகவும் இருக்கக் கூடாது. ஒழுக்கான நடையுடன், கதைத்தன்மையுடன் அமையவேண்டும். அன்றாட யதார்த்தத்தையும் உலகியல்நுட்பங்களையும் சொல்வனவோ அரசியலை முன்வைப்பனவோ வேண்டாம். அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

பொதுவாக மாயயதார்த்தம் – மிகுபுனைவுக் கதைகள் சிறந்தவை என்பது என் எண்ணம். எனக்கு உண்மையில் இங்கிருந்து எங்காவது கிளம்பிப் பயணம் செய்யும் அனுபவத்தை அளிக்கும் கதைகளே இப்போதைய மனநிலையில் பிடித்திருக்கின்றன

ஒரு பதினைந்துநாட்களை புனைவுக்களியாட்டாக ஆக்கிக்கொண்டால் என்ன?

ஜெ

***

முந்தைய கட்டுரைசக்தி ரூபேண! [சிறுகதை]
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5