வெண்முரசு நாவல்தொடரின் அடுத்த படைப்பு டிசம்பர் ஒன்றுமுதல் வெளியாகும். அஸ்தினபுரியில் யுதிஷ்டிரன் முடிசூட்டிக்கொள்வது மட்டுமே அதிலிருக்கும் என்பது என் திட்டம். முதல் பகுதியை இன்று எழுதத் தொடங்கிவிட்டேன்
களிற்றியானைநிரை என்று நாவலின் பெயர். அகநாநூற்றுச் செய்யுள் வைப்புமுறையின் பெயர் அது . யானைநகரின் தோற்றம் என அது எனக்குள் தோன்றுகிறது.